நம்முடைய முன்னோர்களில் பலருக்கு அநேக மனைவிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தருக்குப் பிரியமானவர்களே. ஏரோது, அனனியா, பிலாத்து, யெரொபெயாம், நெபுகாத்நேச்சார், மற்றும் ஆமான் ஆகியோர் ஒரே ஒரு முறை மட்டுமே விவாகம் பண்ணினார்கள்.ஆனால், யெகோவா தேவனுக்கு இதுபோன்ற ஒரே திருமணம் செய்தவர்களை பிடிக்காமல் போய்விட்டது. ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
சூழலுக்கான நமது பதில் : [எபிரெயர் 13 :8] இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
உங்கள் கூற்றுகளுக்கும் நேர்மையான கேள்விக்கும் நன்றி. “அவர்கள் அனைவரும் கர்த்தருக்குப் பிரியமானவர்கள்.”, “யெகோவாவுக்கு இதுபோன்ற ஒரே திருமணம் செய்தவர்களை பிடிக்காமல் போய்விட்டது.” என்ற உங்கள் தொடக்க கூற்றுகளுடன் நாங்கள் உடன்படவில்லை;
இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஒரேவிதமானவராயிருந்து, சகல காரியங்களையும் பற்றிய மாறாத நீதியை உடையவராக இருக்கிறார். வாழ்நாள் முழுவதும் ஒரே ஆண் / ஒரே பெண் என்கிற திருமண விசுவாசமான தேவனுடைய கட்டளையை மீறுவதில் அவர் மகிழ்ச்சி அடைவதில்லை.
எங்கள் சுருக்கமான பதில்:
அப்போஸ்தலர் 17:30-31 அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, [இயேசு] பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த [இயேசு] மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
விளக்கத்திற்கான ஆதரவு: தேவன் தனது திருமணக் கட்டளைகளை தெளிவாக நிறுவியதிலும், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் முழு உடல் வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவரது அறிவிப்பிலும் ஒருபோதும் மாறவில்லை. மனிதனின் படைப்பின் தொடக்கத்திலிருந்தே, பலதார மணத்தில் ஈடுபடும் எவரும் பாவத்தைச் செய்கிறார்கள், இது தேவனின் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்குக் கீழ்ப்படியாததாகும்.
நீங்கள் பட்டியலிட்டுள்ள உண்மைகள் வரலாற்று ரீதியாக துல்லியமான ஒரு ஆவணத்தால் ஆதரிக்கப்படவில்லை, இது தேவன் மற்றும் மனிதனுக்கான அவரது விருப்பத்தைப் பற்றிய உண்மையைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். [இந்த ஆவணம் பரிசுத்த வேதாகமத்தின் வசனங்கள் ஆகும்].
பரிசுத்த வேதாகமத்தில், முதல் கோத்திர பிதாவாகிய ஆதாமும் அவரது மனைவி ஏவாளும் திருமணம் தொடர்பான தேவனின் கட்டளைகளை மீறியதாக எந்தப் பதிவும் இல்லை. ஆரம்பத்தில் ஆதாம் + ஏவாள் இருவரும் கீழ்ப்படிய ஒரே ஒரு கட்டளை மட்டுமே இருந்தது: [ஆதியாகமம் 2:16] தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை. தேவனின் எந்தக் கட்டளையையும் மீறுவது பாவமாகும், அது எப்போதும் மரணத்தை உண்டாக்கும்.
யாக்கோபு 1:13-15 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
ஆதாம் + ஏவாள் பாவம் செய்து, தேவன் நியமித்த சரியான நேரத்தில் அவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட மாமிச உடல்களில் மரண தண்டனையைப் பெற்றனர்.
ஆதியாகமம் 5:3. ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.
ஆதாம் + ஏவாள் இருவரும் மரித்துவிட்டார்கள், ஆனால் அவர்கள் பூமிக்குரிய வாழ்க்கை முழுவதும் ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்ற திருமண பந்தத்தில் உண்மையாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும் என்ற தேவனின் கட்டளையை மீறியதாக நாம் படிக்கவில்லை.
ஆதாம் + ஏவாளின் பாவம் அவர்களின் சந்ததியினர் அனைவரின் இரத்த ஓட்டத்திலும் மரணத்தின் பாவ வைரஸை அறிமுகப்படுத்தியது. அனைத்து மனிதர்களும், ஆதாமின் சந்ததியினர் அனைவரும் உடல் ரீதியாக மரிக்க வேண்டும். கூடுதலாக, அனைத்து மனிதர்களும் ஒரு நாள் தங்கள் தனிப்பட்ட பாவங்களுக்காக நியாயத்தீர்ப்பில் தேவனுக்கு முன்பாக நிற்க வேண்டும், பூமியில் தங்கள் வாழ்நாளில் அவர்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக நேசிப்பதற்கு தேர்ந்தெடுத்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தங்களுக்கு பதில் சிலுவையில் மரித்து, தம்முடைய சரீரத்திலே பாவத்திற்கான தண்டனையை செலுத்தி தீர்த்து விட்டார், என்று விசுவாசித்தால் ஒழிய அந்த நியாயத்தீர்ப்புநாளிலே தப்பித்துக் கொள்ள முடியாது.
நியாயத்தீர்ப்பு நாளிலே கிறிஸ்துவை நிராகரிப்பவர்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் குற்றங்களில் ஒன்று, திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு ஆண்/ஒரு பெண்ணின் விசுவாசமான ஒன்றிணைப்பாக இருக்க வேண்டும் என்ற தேவனின் பிரமாணத்திற்கு அவர்கள் கீழ்ப்படியாததே காரணமாயிருக்கும்.
தெளிவுபடுத்தும் கருத்துகள்:
நமது விவாதத்தை போதுமான அளவு வடிவமைக்க, முதலில் உயர்ந்த உண்மைக் கொள்கைகளை நிர்வகிப்பது குறித்து நாம் உடன்பட வேண்டும். உங்கள் கேள்விக்கு சரியாக பதிலளிக்கவும், முழுமையான உண்மையை அடையவும், நாம் இருவரும் நமது முடிவுகளை உருவாக்கும் அதே அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பின்வரும் உண்மைகளில் நாம் உடன்படவில்லை என்றால், நம்மை உருவாக்கிப் படைத்த தேவனின் உண்மையான கருத்துகளுக்கு முரண்பாடாகவே நாம் போராடிக் கொண்டிருப்போம் “பாவம் நிறைந்த, வீழ்ச்சியடைந்த மனிதர்களின் கருத்துக்களை” மட்டுமே நம்மிடையே பரிமாறிக்கொள்வதன் பயனற்ற புதைகுழியில் நாம் விழுந்துவிடுவோம்.
அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டிய உண்மை கூற்றுகள்:
I. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்த தேவனுடைய குமாரன், கீழ்வரும் நோக்கத்திற்காக தேவன் ஒரு பரிபூரண மனிதனுடைய சரீரத்தை ஏற்றுக்கொண்டார்: 1.) மனிதகுலத்திற்கு பரிசுத்த தேவனை அறிவிப்பதற்காகவும், 2.) இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவரை பின் தொடரும் எல்லா மனிதருக்கும் பாவத்தின் சம்பளமான மரண தண்டனையில் இருந்து விடுவிக்க தன்னை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கவும். 3.) கர்த்தராகிய நானே இரட்சகரென்றும், தேவனுக்கும் மனுஷருக்கும் தாம் ஒருவரே மத்தியஸ்தர் என்றும் தம்மை வெளிப்படுத்த வந்தார்.
I தீமோத்தேயு 3:16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் [இயேசு கிறிஸ்து] மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
யோவான் 14 : 9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
யோவான் 14 : 6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 3:14. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
I தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
II. பரிசுத்த வேதாகமம் என்பது இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நித்திய ஜீவனிலும் தேவனிடமிருந்து மிக உயர்ந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான தேவனின் விருப்பத்தை அறிவிக்கவும், தேவனால் ஏவப்பட்டு அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காக எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தைகளே ஆகும்.
II தீமோத்தேயு 3:16. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
இந்த உண்மை கூற்றுகளை நாம் ஒப்புக்கொள்வது ஏன் மிகவும் முக்கியமானது?
மேற்கூறிய எந்தவொரு கூற்றையும் நீங்கள் நிராகரித்தால், உங்கள் கேள்விக்கான எங்கள் பதிலில் வார்த்தைகளுக்கு உட்பட்டு “உண்மையின் வளையம்” இருக்காது. வேதவசனங்களைப் பற்றி நாம் நம்பாவிட்டால், நம் வார்த்தைகள் வெறுமனே “காற்றில் உச்சரிக்கப்படும் வார்த்தைகளாக” இருக்கும், அவை உங்கள் இதயத்திற்குள் ஊடுருவி இரட்சிக்கக்கூடிய நம்பிக்கையை உருவாக்க முடியாது.
இந்த சத்திய அறிக்கைகள் துல்லியமானவை மற்றும் எல்லா ஜனங்களையும் பிணைக்கக்கூடியவை என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு எங்களுடன் உடன்பட்டால், உங்கள் திருமண கேள்விக்கு எங்கள் பதிலைப் புரிந்துகொள்ள தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார்.
தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே, இந்த சத்தியத்தை அறிவித்து, அவைகளை பரிசுத்த வேதாகமத்தில் இடம் பெறச் செய்தார். அதைக் கேட்கும்போது, ஒவ்வொரு நபரும் இந்த சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ நிர்பந்திக்கப்படுகிறார்கள். நிச்சயமாக, இந்தக் கூற்றுகளை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது நித்தியமானது மற்றும் மிகவும் மாறுபட்ட விளைவுகளைக் கொண்டுள்ளதாய் இருக்கிறது.
எங்கள் கருத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? தேவனுடைய குமாரனும், சகலத்தையும் உண்டாக்கி, மனித குலத்தையும் உருவாக்கி ஒரே விவாகம் பண்ணுதல் குறித்த சத்தியத்தை கூறும் தேவனுடைய வார்த்தையிலிருந்து உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்கப் போகிறோம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், விவாகம் பண்ணுதல் குறித்து தேவன் கூறும் சத்தியத்தை நீங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள், எங்கள் பதிலையும் நிராகரிப்பீர்கள்.
நாங்கள் எந்த மனித தர்க்கத்தையும் நாடவில்லை, ஆனால் சர்வ சிருஷ்டிக்கும் கர்த்தரான இயேசு கிறிஸ்து “உண்மையான விவாகம் பண்ணுதல்”என்றால் என்ன என்பதை கூறியதை மட்டுமே மேற்கோள் காட்ட விரும்புகிறோம்.
தேவன் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கின போது, ஆணும் பெண்ணும் உயிருடன் இருக்கும் வரை, அவர்கள் ஒரே விவாகம் பண்ணுதலில் இணைக்கப்படுவது அவர்களுக்கு மிகச் சிறந்த ஆசீர்வாதமாக இருக்கும் என்று தேவன் கூறினார்.
ஆதியாகமம் 2:23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
மத்தேயு 19 : 3-9 அப்பொழுது, பரிசேயர் அவரைச்[இயேசுவை] சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மீண்டும், உங்கள் கேள்வி: நம்முடைய முன்னோர்களில் பலருக்கு அநேக மனைவிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தருக்குப் பிரியமானவர்களே. ஏரோது, அனனியா, பிலாத்து, யெரொபெயாம், நெபுகாத்நேச்சார், மற்றும் ஆமான் ஆகியோர் ஒரே ஒரு முறை மட்டுமே விவாகம் பண்ணினார்கள்.ஆனால், யெகோவா தேவனுக்கு இதுபோன்ற ஒரே திருமணம் செய்தவர்களை பிடிக்காமல் போய்விட்டது. ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
நாம் முன் சொல்லிய பதிலை பார்ப்போம்: அப்போஸ்தலர் 17:30. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர்[இயேசு] தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை[இயேசு] மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணின் பதிவில் விவாக துரோகம் மற்றும் பாலியல் ஒழுக்கக்கேடு பற்றிய தனது தீர்ப்பில் நியாயமும் கிருபையும் ஆகியவற்றின் ஒற்றுமையை சுருக்கமாகக் கூறி தேவனுடைய அன்பையும் மன்னிப்பையும் இயேசு விளக்குவதைக் காண்போம் (யோவான் 8:1-11)
யோவான் 8:3-5 அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
யோவான் 8 : 9-11 அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
தேவனுடைய குமாரனாகிய இயேசு தம்முடைய நியாயத்தீர்ப்பில் எதை விளக்கினார்?
தேவனுடைய மனது எப்பொழுதும் மாறுகிறது இல்லை. அநேக மனைவிகளை உடையதும், விபச்சாரத்தினால் திருமண உடன்படிக்கையை மீறுவது பாவமாகும், அது மரண தண்டனைக்கு ஏதுவான குற்றம்.இயேசு பாவிகளுக்கான மரண தண்டனையைச் செலுத்த வந்தார். குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய இயேசு நம்முடைய எல்லா பாவத்திற்கான தண்டனையை செலுத்தி விட்டார். இயேசுவின் மரணம் அனைத்து பாவங்களுக்கும் மரண தண்டனையை நிறைவேற்றி விட்டது, எனவே, தேவனின் பிரதிநிதியாகிய கர்த்தராகிய இயேசு ஒவ்வொரு பாவத்தையும், நியாயப்பிரமாணத்தின் மீறுதலையும் மன்னிக்க முடியும்.
மன்னிக்க முடியாத ஒரே ஒரு பாவம் இருக்கிறது என்று இயேசு அறிவித்தார். ஒருபோதும் மன்னிக்க முடியாத பாவம் எது?
இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையின்மை அல்லது விசுவாசமில்லாமை என்பது பரிசுத்த ஆவிக்கு எதிரான தூஷணமாக அறிவிக்கப்படுகிறது.
ஒரு நபர் இயேசுவை இரட்சகராகவும் ஆண்டவராகவும் நிராகரித்தால், அந்த நபரை நித்திய நரகத்தின் வேதனையிலிருந்து காப்பாற்ற வேறு எந்த பலியும் இல்லை.
மத்தேயு 12 :31-32 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
எபிரெயர் 10 :26-27 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், [ஆவியானவருக்கு விரோதமான தூஷணம்] பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
எங்கள் சுருக்கமான முடிவு: ஆதாம் + ஏவாள் மற்றும் அவர்களின் அனைத்து சந்ததியினருக்கும் தேவனை நேசித்து கீழ்ப்படிவதற்கோ அல்லது தேவனை நிராகரித்து அவருடைய கட்டளைகளை மீறுவதற்கோ கற்பனை செய்ய முடியாத ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கோ “சுதந்திரமான” தேர்வு என்ற அற்புதமான பரிசு வழங்கப்பட்டது. நிச்சயமாக, “சுதந்திர விருப்பத்தின்” இந்த பரிசு நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் பாதிக்கிறது, இதில் ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்று திருமண சட்டத்தை உண்மையிலேயே விசுவாசிப்பதும், அவர்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் புனித திருமணத்தில் முத்திரையிடப்பட்டுள்ளனர் என்ற தேவனின் தெளிவான அறிவிப்பும் அடங்கும்.
தேவன் பலதார மணங்களை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை, ஆனால், அவருக்கு எதிரான நமது பலவிதமான மீறலுக்கான செயல்களுக்கு தேவன் செய்தது போலவே, மனிதனின் பாவத்தின் தேர்ந்தெடுப்புக்கான விலையை செலுத்த தேர்ந்தெடுத்தார், இயேசுவை நேசிப்பவர்களுக்காக, தேவன் நிராகரித்த பாவங்களுக்கு விலை கொடுக்க தம்முடைய குமாரனாகிய இயேசுவை உலகிற்குக் கொண்டு வருவதன் மூலம் மனிதகுலத்தை மீட்டு மீண்டும் தன்னிடம் ஒப்புரவாக்குவதற்கான தனது இறுதியான அளவற்ற நன்மையை கொடுக்க தீர்மானித்தார்.
உங்கள் கேள்விக்கு எங்களுடைய சிறந்த பதில், தேவன் நியமித்த முழுமையான திருமணத் திட்டமான, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனது வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்வதாகும். திருமணத்திற்கான தேவனின் முதல் நோக்கத்திற்கு எதிராக மனிதர்கள் பாவம் செய்தபோது தேவன் ஏன் உடனடியாக முன்னோர்களை கொல்லவில்லை?
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, அந்த தருணத்திலிருந்து முழு மனித இனத்திற்கும் உடல் ரீதியான மரணத்தை ஏற்படுத்தியது. தக்க சமயத்தில், பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய தேவன் மனிதனுக்கு காட்டிய அன்பு மற்றும் கிருபையின் ஆழத்தில் தேவனுடைய பாதுகாப்பு விளங்குகிறது.
எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத தேவன், அவருடைய பரிபூரண அன்பிலும் மகிழ்ச்சியிலும் என்றென்றும் நிலைத்திருக்க ஒரு குடும்பத்தைப் தேர்ந்தெடுக்க விரும்பினார். அந்த அன்பு தன்னார்வமாக இருக்க வேண்டும் அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தேவன் மனிதகுலத்தை தனது சாயலில் படைத்தார், அவரை நேசிக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும் அவர்களை “சுதந்திர விருப்பத்துடன்” உருவாக்கினார். தங்கள் “சுதந்திரமான” விருப்பத்துடன் மனிதன் தேவனையும் அவரது அன்பையும் நிராகரித்து, தேவனின் விருப்பத்தை விட தங்களையும் தங்கள் சொந்த விருப்பத்தையும் நேசிக்கத் தேர்ந்தெடுத்தான்.
ஆதாம் + ஏவாள் பாவம் செய்த தருணத்தில், தேவன் பாவிகளான தம்முடைய பிள்ளைகளை மீட்டெடுக்க மீண்டும் தம்முடன் சமாதானம் பெற, அனாதி காலமாய் தன்னுடைய திட்டத்தை செயல்படுத்தினார். உண்மையிலேயே, இயேசு, ஆதாம் + ஏவாளின் பாவங்களுக்காகவும், இயேசு கிறிஸ்துவை தங்கள் இரட்சகராகவும், ஆண்டவராகவும், நண்பராகவும் ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு மனிதருக்காகவும் மரிப்பதற்கு ஒரு முழுமையான மனிதரானார். இது ஒரு தனிப்பட்ட நபரின் தனிப்பட்ட தேர்வாகும்.
யோவான் 3:14-17 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
உங்கள் கடினமான கேள்விக்கான பதிலை, நாம் பார்க்கும்போது, தேவனைக் குறித்த உண்மையான சத்தியத்தை பிரசங்கிக்க தேவனுடைய குமாரனாகிய இயேசு இந்த பூமிக்கு வந்தார்.
அப்போஸ்தலர் 17:30-31 அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; [தற்காலிகமாக, அதாவது, உடனடியாக மரணத்தால் தீர்மானிக்கப்படவில்லை] இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை[இயேசு] மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
நாம் ஒன்றாகச் செல்ல வேண்டிய நேரம் இது, நமது கேள்வி மிகவும் தனிப்பட்டதாக மாறுகிறது: இயேசு கிறிஸ்துவின் அன்பையும் மன்னிப்பையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறீர்களா?
நீங்கள் மனந்திரும்பி நம்பிக்கையோடே இயேசுவை விசுவாசியுங்கள், என்ற தேவனின் கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் கீழ்ப்படிவீர்களா?
இயேசுவின் மரணம் முழு உலகின் பாவத்தை தீர்க்கும் விலையை செலுத்த போதுமானதாக இருந்தபோதிலும், கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதமான நித்திய ஜீவனை எந்த மனுஷனும் தனியாகவே, அவனுக்கு நியமிக்கப்பட்ட சமயத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
யோவான் 1: 10-13 அவர்[இயேசு] உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
இப்போது நீங்களே பதிலளிக்க வேண்டிய கேள்வி இதுதான்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராகவும் நண்பராகவும் நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் அவரைப் பெற்றுக்கொண்டீர்களா?
ரோமர் 10 :9-11 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.”
இந்தப் பதிலை அனுப்பும்போது உங்களுக்காக நாங்கள் ஜெபித்தோம். நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராகவும், இரட்சகராகவும், நண்பராகவும் ஏற்றுக்கொண்டிருந்தால், தயவுசெய்து எங்களுக்குத் தெரிவியுங்கள். நாங்கள் உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தயவுசெய்து அந்த வேண்டுகோளை உங்கள் பதிலில் குறிப்பிடவும்.
அனைவருக்கும் எங்கள் அன்பு,
கிறிஸ்துவில் –
ஜான் + பிலிஸ் + நண்பர்கள் @ WasItForMe.com

